ஆசைமுகம் மறந்து போச்சே, இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நன்னு முகவடிவு காணில், அந்த
நல்லவல்ல சிரிப்பை காணோம்
கண்ணன் முகம் மறந்து போனால், இந்த
கண்கள் இருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய், இனி
வாழும் வழி என்னடி தோழி
-
பாரதியார்
Wednesday, July 15, 2009
Subscribe to:
Posts (Atom)
