Wednesday, July 15, 2009

ஆசைமுகம் மறந்து போச்சே

ஆசைமுகம் மறந்து போச்சே, இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நன்னு முகவடிவு காணில், அந்த
நல்லவல்ல சிரிப்பை காணோம்

கண்ணன் முகம் மறந்து போனால், இந்த
கண்கள் இருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய், இனி
வாழும் வழி என்னடி தோழி

-

பாரதியார்

Saturday, May 09, 2009

புதிய பறவை - உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன் ... உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை

நிலவில்லா வானம் ... நீரில்லா மேகம்
பேசாத பெண்மை... பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் ... தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் ?

தனிமையில் கானம் .. சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் ... அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?

Sunday, August 24, 2008

Happy Birthday Krishna

என்னோட அப்பா கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு பூஜை பன்னர்துண்டு. இன்னிக்கும் வழக்கம் போல பூஜை பண்ணாரு. நா சின்ன வயசுல அவரு கூடபூஜைக்கு உக்காரர்த்து வழக்கம். இன்னிக்கும் அவரு கூட உக்காந்து என்ன பன்ன்ராருன்னு பார்த்தேன். அவரு சொல்லற ச்லோகத்ல, கொஞ்சம் ருத்ரம் லயும் இருந்துது. முதல்ல சொன்னதெல்லாம் எதோ கணபதி பூஜை.. எல்லா பூஜைக்கும் பண்ணனுமா. அதுக்கு அப்பரம், அவரு எதோ installation பண்ணாரு. அந்த விக்ரஹத்துல சாமிய install பண்ணனுமாம். அதுக்கு அப்பரம் அதுக்கு பூஜை பண்ணனுமாம். அதுக்கு அப்பரம் அவரு சொன்ன ச்லோகத்துல கொஞ்சம் கதையும் இருந்துது... கிருஷ்ணர் எப்படி பாண்டவர்களை காப்பதினாறு, எப்படி பொறந்தாரு .. இது தான் அந்த ச்லோகதுல இருந்துது. அதுக்கு அப்பரம் நாங்க பண்ண அவுல் பாயசத்த நல்ல சாப்டோம். அடுத்த நாள் காலேல uninstallation பண்ணாரு. இதுக்கு பேரு தான் புனர் பூஜை. இந்த மாதிரி நமக்கு தெரிஞ்ச பாஷைல சொல்லாம எதோ சாமி கண்ண குத்திடும்னு சொன்னா எப்படி எல்லாரும் புரிஞ்சு நடந்துப்பாங்க. முதல்ல எல்லா அப்பா அம்மா வாத்தியாருக்கும் software engineering சொல்லிக்குடுங்கப்பா !!

கடைசீல கிருஷ்ணருக்கு happy birthday சொல்ல மறந்துட்டேன். கிருஷ்ணா ஹாப்பி பர்த்டே !!

Wednesday, August 20, 2008

Kannthil Muthamittal - Vellai Pookkal


கன்னத்தில் முத்தமிட்டால்


வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முக சிரிப்பில்

(வெள்ளை பூக்கள்..)

காற்று பெசயின் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

(வெள்ளை பூக்கள்..)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

(வெள்ளை பூக்கள்..)



Tuesday, August 19, 2008

Kangal Irandal - Subramaniapuram

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னையின்றி வேறொரு நினைவில்ல
இனி இந்த வூனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வாழ

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு
கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்


இப்போது இந்த பாட்ட நம்ம youtube ல பாருங்க



lyrics via Tamil Lyrics

Saturday, August 16, 2008

Ninaivellam Nithya - Panivizhum Malarvanam

பனிவிழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா


பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

(பனிவிழும்)

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
இளமையின் நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கையில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனிவிழும்)

Monday, August 04, 2008

தமிழ்ல blogging

தமிழ்ல blogging ரொம்ப நல்ல இருக்கு ! நா ஒன்னும் பெரிசா blogging பண்ணறது கிடையாது. ஆனாலும் கொஞ்சம் blog தமிழ்ல எழுதலாம்னு தோணறது.