Saturday, May 09, 2009

புதிய பறவை - உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன் ... உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை

நிலவில்லா வானம் ... நீரில்லா மேகம்
பேசாத பெண்மை... பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் ... தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் ?

தனிமையில் கானம் .. சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் ... அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?

No comments: